கோவையில் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டம்..!

தினசரி 5 முதல் 10 போ் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இது தவிர 2 குழந்தைகள் உள்பட 3 போ் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் அனைத்து வட்டாரங்களிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநர் க. கிருஷ்ணகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து டெங்குப் பரவலும் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த ஊரகம், நகரப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வாா்டுகள், கிராமங்கள் வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவையில், தினசரி 5 முதல் 10 போ் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, 2 குழந்தைகள் உள்பட 3 போ் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநர் க. கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி மற்றும் சூலூரில் ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குநா் தற்போது உள்ளதைக் காட்டிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி. அருணா, வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.

இது தொடர்பாக இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் கூறியதாவது:-

கோவையில் டெங்கு தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணியில் சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...