பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நிமிடம் வாகனம் நிறுத்தும் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாலும், உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறியும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே காங்கேயம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10 நிமிடம் வாகனம் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.