இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்று பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் வால்பாறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வால்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் சுமார் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தேயிலைத் தோட்டத்தில் அருகில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இறந்தவர் பெயர் யார் என்பது இதுவரை தெரியவில்லை, இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்று பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் வால்பாறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வால்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் சுமார் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தேயிலைத் தோட்டத்தில் அருகில் இறந்து கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இறந்தவர் பெயர் யார் என்பது இதுவரை தெரியவில்லை, இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.