புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் 406, 420 ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற வாலிபர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் (40). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த முத்து என்கிற முத்துப்பாண்டி என்பவர் வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக மனோஜ்குமார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அலுவலக வேலை மற்றும் வங்கிக்கு சென்று வருவது உள்ளிட்ட வேலைகளை அவர் நம்பிக்கையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மனோஜ் குமார் நேற்று 5 லட்ச ரூபாய்க்கான செக்கை முத்துவிடம் கொடுத்து பணம் எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார். வெள்ளலூர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குச் சென்று செக்கை கொடுத்து முத்து பணத்தை எடுத்தார்.
ஆனால், ஐந்து லட்ச ரூபாய் பணத்தை உரிமையாளர் மனோஜ்குமார் இடம் கொடுக்காமல் தப்பிச்சென்றார். பணம் எடுக்கச் சென்ற முத்து வெகு நேரம் ஆகியும் வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு மனோஜ்குமார் தொடர்பு கொண்டார்.
ஆனால், முத்துவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முத்துவை பல இடங்களில் சென்று தேடி பார்த்தார். ஆனால், முத்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.
இதையடுத்து, மனோஜ்குமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் sec 406, 420 IPC பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் (40). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த முத்து என்கிற முத்துப்பாண்டி என்பவர் வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக மனோஜ்குமார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அலுவலக வேலை மற்றும் வங்கிக்கு சென்று வருவது உள்ளிட்ட வேலைகளை அவர் நம்பிக்கையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மனோஜ் குமார் நேற்று 5 லட்ச ரூபாய்க்கான செக்கை முத்துவிடம் கொடுத்து பணம் எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார். வெள்ளலூர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குச் சென்று செக்கை கொடுத்து முத்து பணத்தை எடுத்தார்.
ஆனால், ஐந்து லட்ச ரூபாய் பணத்தை உரிமையாளர் மனோஜ்குமார் இடம் கொடுக்காமல் தப்பிச்சென்றார். பணம் எடுக்கச் சென்ற முத்து வெகு நேரம் ஆகியும் வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு மனோஜ்குமார் தொடர்பு கொண்டார்.
ஆனால், முத்துவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முத்துவை பல இடங்களில் சென்று தேடி பார்த்தார். ஆனால், முத்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.
இதையடுத்து, மனோஜ்குமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் sec 406, 420 IPC பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.