திருப்பூரில் அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்த 10:30 -மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவார் என அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் 10:30-மணிக்குள்ளாக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வந்திருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டுச் சென்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதனால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சியினர் இறுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக் காட்ட இருந்த சூழ்நிலையில், அதைத் தவிர்ப்பதற்காகவே மாவட்ட ஆட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும், இது கண்டிக்கத்தக்கது எனவும் இது அரசியல் கட்சியினரை அவமரியாதை செய்யும் போக்கு என குற்றம்சாட்டினர்.



இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...