திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளை அவமரியாதை செய்ததாக ஆட்சியர் மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்த 10:30 -மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவார் என அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனடிப்படையில் 10:30-மணிக்குள்ளாக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வந்திருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டுச் சென்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சியினர் இறுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக் காட்ட இருந்த சூழ்நிலையில், அதைத் தவிர்ப்பதற்காகவே மாவட்ட ஆட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும், இது கண்டிக்கத்தக்கது எனவும் இது அரசியல் கட்சியினரை அவமரியாதை செய்யும் போக்கு என குற்றம்சாட்டினர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்த 10:30 -மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவார் என அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனடிப்படையில் 10:30-மணிக்குள்ளாக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வந்திருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டுச் சென்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அரசியல் கட்சியினர் இறுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக் காட்ட இருந்த சூழ்நிலையில், அதைத் தவிர்ப்பதற்காகவே மாவட்ட ஆட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும், இது கண்டிக்கத்தக்கது எனவும் இது அரசியல் கட்சியினரை அவமரியாதை செய்யும் போக்கு என குற்றம்சாட்டினர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.