கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்-323 பயனாளிகளுக்கு ₹ 55.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்-323 பயனாளிகளுக்கு ₹ 55.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2-ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகப் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட வடசித்தூர் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தல் பிரிவின் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் அம்சவேணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, முகாமில் பெறப்பட்ட 410-மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு 323-பயனாளிகளுக்கு 55-லட்சத்து 82-ஆயிரத்து 154-ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்த முகாமில் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, திமுக மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2-ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகப் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட வடசித்தூர் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தல் பிரிவின் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் அம்சவேணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, முகாமில் பெறப்பட்ட 410-மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு 323-பயனாளிகளுக்கு 55-லட்சத்து 82-ஆயிரத்து 154-ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்த முகாமில் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, திமுக மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.