தினமும் கல்குவாரியில் வெடி வைப்பதால் விவசாய பூமியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கல்குவாரி உரிமையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பெரிய கவுண்டனூர், நல்லி கவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
தேவராயபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பூமிகள் கல் குவாரி இயங்கி வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கல்லுடைத்து கேரளா மாநிலத்திற்குக் கொண்டு செல்கின்றனர்.
தினமும் கல்குவாரியில் வெடி வைப்பதால் விவசாய பூமியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக வெடி வைத்து தகர்த்து அழித்து வருகின்றனர்.
இதனால், கிணற்று நீர் மட்டம் குறைந்து விவசாய பூமியில் ஆடுமாடுகள் கூட வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது எனவும், விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிணற்றில் தண்ணீர் வற்றி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குவாரியில் வெடி வைக்கும் பொழுது ஏற்படும் புகை மண்டலத்தால் காசு மாற்றம் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறோம். ஆகவே, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யுமாறு விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பெரிய கவுண்டனூர், நல்லி கவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
தேவராயபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பூமிகள் கல் குவாரி இயங்கி வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கல்லுடைத்து கேரளா மாநிலத்திற்குக் கொண்டு செல்கின்றனர்.
தினமும் கல்குவாரியில் வெடி வைப்பதால் விவசாய பூமியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக வெடி வைத்து தகர்த்து அழித்து வருகின்றனர்.
இதனால், கிணற்று நீர் மட்டம் குறைந்து விவசாய பூமியில் ஆடுமாடுகள் கூட வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது எனவும், விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிணற்றில் தண்ணீர் வற்றி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குவாரியில் வெடி வைக்கும் பொழுது ஏற்படும் புகை மண்டலத்தால் காசு மாற்றம் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறோம். ஆகவே, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யுமாறு விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.