சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்ட ராணுவ வீரர்களின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் எம்.ஐ. 17வி ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின் தமிழக அரசின் அமரர் ஊர்தியில் தனித்தனியாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. வரும் வழியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்ட அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே திடீரென விபத்துக்குள்ளாகியது.
பின்னர் மற்றொரு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியது.

இதையடுத்து, போக்குவரத்து சரி செய்தபின் ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு 2.55 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.

சாலை வழியாக கொண்டுவரப்பட்ட உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் எம்.ஐ. 17வி ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின் தமிழக அரசின் அமரர் ஊர்தியில் தனித்தனியாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. வரும் வழியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்ட அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே திடீரென விபத்துக்குள்ளாகியது.
பின்னர் மற்றொரு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியது.
இதையடுத்து, போக்குவரத்து சரி செய்தபின் ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு 2.55 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.
சாலை வழியாக கொண்டுவரப்பட்ட உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது.