பொள்ளாச்சி அருகே போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பில் 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குட்கா பறிமுதல்..!

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே போலீசார் நடத்திய தீவிர கண்காணிப்பில் 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா மற்றும் பான் மசாலா, ரேஷன் அரிசி மற்றும் போதை வஸ்துகள் கடத்த முயற்சிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க ஆணை பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி, ஆனைமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நடுப்புணி, கோபாலபுரம், கோவிந்தாபுரம், செமனபதி, காளியாபுரம், ஜமீன் காளியாபுரம் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில், பான்பராக் குட்கா விற்பனை செய்யும் கடைகளில் கண்காணித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி வாகன சோதனையின் போது, சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து போது காரை நிறுத்திவிட்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், காரை பறிமுதல் செய்த போலீசார், சோதனையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கேரளாவுக்கு கடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி, மகாலிங்கபுரம் உதவி ஆய்வாளர் கௌதம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெட்டிக் கடைகளில் உதவி ஆய்வாளர் நடத்திய தீவிர சோதனையில் 35 பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன், ராஜன், ராதாகிருஷ்ணன் மூவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...