கோவை அருகே ரேஷன் கடை கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய 4-காட்டுயானைகள்!

கோவை அருகே 4-காட்டுயானைகள் ரேஷன் கடை கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தியதால், பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது.


கோவை: கோவை அருகே 4-காட்டுயானைகள் ரேஷன் கடை கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வெளியே தூக்கி வீசி நாசப்படுத்தியதால், பொருட்கள் விநியோகம் பாதிப்படைந்தது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.

கோவையை அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வரப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுப்பதற்காக அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் மூட்டைகளிலிருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4-காட்டு யானைகள் வரப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது. நேராக அந்த பகுதியிலிருந்த ரேஷன் கடைக்கு சென்ற 4-காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன.

பின்னர் கடைக்குள் இருந்த ரேஷன் அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட மூட்டைகளைத் தூக்கி அங்கும் இங்கும் வீசின. மேலும் மூன்று மூட்டைகளைத் தூக்கி சாலையில் வீசி எறிந்த யானைகள் பின்னர் அதனை உண்டு காலால் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது ரேஷன் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தன.

உடனடியாக ஊராட்சி தலைவர் கார்த்தி கேஸ்வரி சுந்தர்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையைப் பார்வையிட்டு அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அந்த பகுதி முழுவதும் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...