மூத்த இராணுவ அதிகாரிகள், நீலகிரி ஆட்சியர் அம்ரீத் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் 15 நிமிடங்கள் ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து நேரில் விவரம் அறிய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கோவை வந்தார். பின்பு சாலை வழியாக குன்னூர் சென்றார்.
பின்னர், அங்கு மூத்த இராணுவ அதிகாரிகள், நீலகிரி ஆட்சியர் அம்ரீத் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் 15 நிமிடங்கள் ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்ற முதல்வர் குன்னூரில் உள்ள தனியார் விடுதியில் ஒய்வு எடுக்க கிளம்பினார்.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.