கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர், 15- வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர், 15- வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆழியாறு புளியங்கண்டி விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில் தற்போது அந்த 15 வயது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கோபிநாத்தைக் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆழியாறு புளியங்கண்டி விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில் தற்போது அந்த 15 வயது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கோபிநாத்தைக் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.