கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூரில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 3-பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூரில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 3-பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடைக்கப்பட்டது.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிறுத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து மூன்று வாலிபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் இ வீரப்பகவுண்டனூரில் கடைகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23),பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(எ)ராசுக்குட்டி(21) கிருஷ்ணசாமிபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(28) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடைக்கப்பட்டது.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிறுத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து மூன்று வாலிபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் இ வீரப்பகவுண்டனூரில் கடைகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23),பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(எ)ராசுக்குட்டி(21) கிருஷ்ணசாமிபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(28) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.