சசிகலா, ரஜினிகாந்த் சந்திப்பின் பின்னணி? திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆருடம்

ரஜினிகாந்த் சசிகலா சந்திப்பு குறித்துப் திருப்பூரில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் சன் டிவி ரஜினியை வைத்து படம் எடுத்தது போல, ஜெயா டிவி ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார்களோ அல்லது இருவரும் ஒரு சேர பாஜகவில் இணைய நினைக்கிறார்களோ என பேட்டியளித்தார்.


திருப்பூர்: ரஜினிகாந்த் சசிகலா சந்திப்பு குறித்துப் திருப்பூரில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் சன் டிவி ரஜினியை வைத்து படம் எடுத்தது போல, ஜெயா டிவி ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார்களோ அல்லது இருவரும் ஒரு சேர பாஜகவில் இணைய நினைக்கிறார்களோ என பேட்டியளித்தார்.



இந்துக்கள் புனிதஸ்தலமாக கருதிய காசி கோவில் ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. இன்று பல லட்சம் சதுர அடியில் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. சிவாஜி மகாராஜாவிற்குப் பிறகு தேசத்தின் தன்மானத்தை உயர்த்தி பிடிப்பவராகப் பிரதமர் மோடி உள்ளார். யாரின் மனதும் புண்படாமல் இந்து மக்களின் தன்மான உணர்வை உயர்த்தி பிடித்துள்ளார். காசியில் 13, 14 தேதிகள் விழாக்கோலம் பூணும் நாளாக அமைய உள்ளது

இந்தியத் தேசம் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் விரும்பப்படும் தேசமாக மாறி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசு நாடுகளுடன் இணக்கமாக இருக்கம் புதிய உலக சக்தியாக இந்தியாவை மாற்றி உள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் ஆணவப் போக்குக்கு முற்றுப் புள்ளி வைக்கம் நிகழ்வாக ரஷ்ய பிரமருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது‌.

தை ஒன்றில் தான் மகளிருக்குத் தனி பார் திறக்க போகிறார்களா? தமிழ் மக்கள் போதையிலிருந்து வெளிவந்தவராக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேர். அதன் மீது வெந்நீர் ஊற்றும் விதமாக மகளிருக்குத் தனி பார் என்பது தமிழ் கலாச்சாரமா? வள்ளுவர் கலாச்சாரமா? இவர்கள் ஒரு போதும் தமிழர்கள் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்க போவதில்லை என்பதை இவர்களின் ஒவ்வொரு முடிவும் எடுத்து காட்டுகிறது.

எப்படியோ ஆட்சிக்கு வந்து விட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின்பாவது சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் மகளிருக்குத் தனி பார் என்பது எந்த ஒரு தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத முடிவாக உள்ளது.

இருவிதமான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. ஒமைக்ரான் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எப்படி கொரோனாவை மோடி தலைமையில் தேசம் எதிர்கொண்டதோ. அதே போல் மீண்டும் இக்கட்டான நிலை வந்தாலும் அதற்கு மாற்றை கண்டறியும் வகையில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருந்து வருகிறார் அது எவ்வளவு பெரிய இடரில் இருந்தும் இந்தியாவைக் கட்டிக் காக்கும்.

ரஜினிகாந்த் சசிகலா சந்திப்பு பற்றி குறிப்பிட்ட அவர், சன் டிவி தான் ரஜினியை வைத்து படம் எடுத்தார்கள் இனி ஜெயா டிவி ரஜினியை வைத்து படம் எடுக்குமோ என்ற எண்ணம் தான் எங்களுக்கு எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலம் பாஜக தான் என்ற அடிப்படையில் சசிகலாவும் ரஜினிகாந்த்தும் ஒரு சேர பாஜகவில் இணைய நினைக்கிறார்களோ என்னவோ என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...