மேலும், போக்ஸோ வழக்குகள் குறித்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகரில் உள்ள ரெளடிகள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமாா் தெரிவித்தார்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதிகளில் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாநகரில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெளடிகள் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், குற்றச்செயல்களைத் தடுக்க ஏ, பி, சி என 3 வகைகளில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாகப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகள் குறித்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதிகளில் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாநகரில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெளடிகள் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், குற்றச்செயல்களைத் தடுக்க ஏ, பி, சி என 3 வகைகளில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாகப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகள் குறித்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.