கோவையில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி..! வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!!

மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவையில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக கோவை மற்றும் சுற்று பகுதிகளில் மழைநீர் தேக்கம் அடைந்து வருவதால், டெங்கு மற்றும் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் கோவை மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் பிற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், சிறுவனின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவுபடி பெரிய நெகமம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதன் எதிரொலியாக, கோவையில் மழைக்கால தொற்று தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, அவ்வப்போது மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வீடுகள், நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் வரும் காய்ச்சல் பாதிப்புகள் அனைத்துமே டெங்கு பாதிப்பு இல்லை என்றும் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது சற்றே அதிகரித்துள்ளது என்பதால், இதற்காக பல்வேறு இடங்களில் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீடுகள் தோறும் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்து, பாதிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. தங்களது பெற்றோரிடமும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், வீடுகள் அருகே மழைநீர் தேங்க விடக்கூடாது எனவும் மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...