கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் -11,712 பாஸ்போர்ட் விநியோகம்

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டைவிட அதற்கு முந்தைய ஆண்டான கடந்த 2019-நவம்பர் மாதத்தில் 11,500-பாஸ்போர்ட்கள் விநியோகம். அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 200 பாஸ்போர்ட் வரை அதிகம் வழங்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் -11,712 பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டன.

கோவை உள்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். கோவையில், உப்பிலிபாளையம் பகுதியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அலுவலகம் மற்றும் அவிநாசி ரோடு சித்ரா அருகே பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு தினங்களில் பயனாளிகளுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த மாதம் 11,712 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. எனவே கடந்த ஆண்டைவிட அதற்கு முந்தைய ஆண்டான கடந்த 2019 நவம்பர் மாதத்தில் 11,500 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 200 பாஸ்போர்ட் வரை அதிகம் வழங்கப்பட்டுள்ளன.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவில் பாஸ்போர்ட் வழங்க கோவையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு, பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...