10-ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள்..? போலீஸ் மீது கோபமடைந்த எஸ்.பி.வேலுமணி

10-ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள் எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அஞ்சமாட்டோம். காவல்துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.


கோவை: காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாகவும், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.



கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-



திமுக ஆட்சிக்கு வந்து 6-மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் சொன்னதை எதுவும் செய்யாமல் வெறும் விளம்பரத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர். நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது எந்த கட்டப்பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் என் மீது பழி போடுகிறார். நாங்கள் ஆட்சியிலிருந்த போதும் பல இயற்கை சீற்றங்கள் வந்தது. அப்போது மக்களை நேரடியாகச் சந்தித்து களப்பணியாற்றினோம்.



இப்போது, அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். காவல்துறையை நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. இன்று தொட்டதற்கெல்லாம் வழக்குப் போடுகின்றனர். 10 ஆண்டுகளாக எப்படி இருந்தீர்கள் எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அஞ்சமாட்டோம். காவல்துறை நடு நிலையோடு நடந்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக டிரேன்ஸ்பர் செய்வார்கள் அவ்வளவு தானே. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நியாயமாக இருக்கிறோம்.

நாங்கள் கொடுத்த திட்டங்களை திமுக நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். சென்னையில் நாங்கள் தொடங்கிய வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. முழுமையாக வேலைகள் முடிக்கும் போது தண்ணீர் தேங்காது.

கோவையில் 300 பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் மூலம் பணிகளை மீண்டும் துவங்க வைக்க வேண்டும். கொள்ள வேண்டும். அதிகபட்சமாக டிரேன்ஸ்பர் செய்வார்கள் அவ்வளவு தானே. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக நியாயமாக இருக்கிறோம்.



நாங்கள் கொடுத்த திட்டங்களை திமுக நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். சென்னையில் நாங்கள் தொடங்கிய வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. முழுமையாக வேலைகள் முடிக்கும் போது தண்ணீர் தேங்காது.

கோவையில் 300 பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர். நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் மூலம் பணிகளை மீண்டும் துவங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...