பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்

பொள்ளாச்சியில் மார்க்கெட் ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மார்க்கெட் ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோபாலபுரம் செல்லும் அரசு பேருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் தர்மலிங்கம் இயக்கினார்.

அப்போது மார்க்கெட் சாலை திருவள்ளுவர் திடல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலை நடுவே சிலர் நடந்து சென்று கொண்டிருந்ததால் ஓட்டுநர் ஒலி எழுப்பி விலகி செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் அபுதாஹீர் என்பவர் பேருந்தில் ஏறி ஓட்டுநர் தர்ம லிங்கத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இருவருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது.

தகாத வார்த்தையால் திட்டி பயணிகள் முன்னிலையிலேயே தர்ம லிங்கத்தை ஆட்டோ ஓட்டுநர் அபுதாஹிர் சரமாரியாகத் தாக்கினார்.

பின்னர் பயணிகள் மற்றும் நடத்துனர் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தர்மலிங்கம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் அபுதாஹீரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...