ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 1-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 1-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை சூலூர் சுல்தான்பேட்டை செலக்கரசல் மதுரை வீரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம் 33, இவருக்கு சித்தார்த் என்ற குழந்தை உள்ளது.
சித்தார்த் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சித்தர் தனது நண்பர்களுடன் செலக்கரிசல் மதுரை வீரன் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சில வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைத் தெரியாமல் அந்த பகுதியில் தங்கி டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த சண்முகம் என்பவர் அங்கிருந்த ஜீப்பை பின் நோக்கி வேகமாக எடுத்தார்.
ஜீப் வருவதைப் பார்த்து விளையாடிக்கொண்டிருந்த சிறு குழந்தைகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சித்தார்த் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சித்தார்த்துக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுல்தான் பேட்டை போலீசார் அங்கு வந்து சித்தார்த்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.