ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து 1-ம் வகுப்பு மாணவன் பலி

ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 1-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 1-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை சூலூர் சுல்தான்பேட்டை செலக்கரசல் மதுரை வீரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம் 33, இவருக்கு சித்தார்த் என்ற குழந்தை உள்ளது.

சித்தார்த் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சித்தர் தனது நண்பர்களுடன் செலக்கரிசல் மதுரை வீரன் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சில வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைத் தெரியாமல் அந்த பகுதியில் தங்கி டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த சண்முகம் என்பவர் அங்கிருந்த ஜீப்பை பின் நோக்கி வேகமாக எடுத்தார்.

ஜீப் வருவதைப் பார்த்து விளையாடிக்கொண்டிருந்த சிறு குழந்தைகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சித்தார்த் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சித்தார்த்துக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுல்தான் பேட்டை போலீசார் அங்கு வந்து சித்தார்த்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...