திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூரில் தீயணைப்புத் துறையினர் சார்பாகத் திருப்பூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கான தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வது குறித்துத் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏதாவது ஒரு இடத்தில் தீ பற்றிக் கொண்டால் அவற்றை அணைப்பது மற்றும் அவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் நிலைய வளாகத்தில் அதற்கான ஒத்திகை நிகழ்வையும் தீயணைப்புத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.