கோவையில் நள்ளிரவில் தண்டவாளத்தில் தலைவைத்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

நேற்று இரவு வீட்டில் இருந்த மாணவர், தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு, போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே உள்ள இ.பி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் ஆண்டோ புகழ் ராயன் வயது 19, இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களாக ஆண்டோ புகழ் ராயன் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்ததால், தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர், போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். பின்னர், 12 மணி அளவில் அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரயில் மாணவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மாணவர் இறந்தார். இதுகுறித்து, ரயில் எஞ்சின் டிரைவர் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...