நேற்று இரவு வீட்டில் இருந்த மாணவர், தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு, போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துள்ளார்.
கோவை: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே உள்ள இ.பி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் ஆண்டோ புகழ் ராயன் வயது 19, இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக ஆண்டோ புகழ் ராயன் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்ததால், தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர், போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். பின்னர், 12 மணி அளவில் அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரயில் மாணவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மாணவர் இறந்தார். இதுகுறித்து, ரயில் எஞ்சின் டிரைவர் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக ஆண்டோ புகழ் ராயன் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்ததால், தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர், போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். பின்னர், 12 மணி அளவில் அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரயில் மாணவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மாணவர் இறந்தார். இதுகுறித்து, ரயில் எஞ்சின் டிரைவர் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.