37 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஒரு நிறுவனத்தில் மட்டும் பல ஆண்டுகளாக வரவு செலவு கணக்கில் ரூபாய். 1000 கோடிக்கு மேல் குளறுபடி செய்து வந்துள்ளது அம்பலம்.
கோவை: சென்னையில் கடந்த வாரம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு கிளைகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதை அடுத்து, வருமான வரித்துறையினர் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஒரு நிறுவனத்தில் மட்டும் பல ஆண்டுகளாக தங்கள் விற்பனையைக் குறைத்து மதிப்பிட்டு வரவு செலவு கணக்கில் ரூபாய். 1000 கோடிக்கு மேல் குளறுபடி செய்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இவ்விரு நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனத்தில் ஒன்றில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்ட்டுள்ளதோடு 150 கோடி ரூபாய் அளவுக்கு ரசீது இல்லாமல் பணமாக கொடுத்து ஜவுளி மற்றும் நகைகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிறுவனத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகள் கைபடப்பட்டுள்ளது. மேலும், பழைய பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் 7 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது, என வருமான துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஒரு நிறுவனத்தில் மட்டும் பல ஆண்டுகளாக தங்கள் விற்பனையைக் குறைத்து மதிப்பிட்டு வரவு செலவு கணக்கில் ரூபாய். 1000 கோடிக்கு மேல் குளறுபடி செய்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இவ்விரு நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனத்தில் ஒன்றில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்ட்டுள்ளதோடு 150 கோடி ரூபாய் அளவுக்கு ரசீது இல்லாமல் பணமாக கொடுத்து ஜவுளி மற்றும் நகைகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிறுவனத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகள் கைபடப்பட்டுள்ளது. மேலும், பழைய பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் 7 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது, என வருமான துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.