கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஊழியர்களே அந்த பாம்பினை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
கோவை: கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை சரவணம்பட்டியில் தமிழக அரசின் எலைட் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்ரக மதுபாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று கடையில் பணியிலிருந்த ஊழியரில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது, பெட்டிக்குள் சாரைப்பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தைரியமாகப் பெட்டிக்குள் இருந்த பாம்பினை லாவகமாகப் பிடித்துள்ளார்.
பின்னர்,டாஸ்மாக் ஊழியர்களே அந்த பாம்பினை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சரவணம்பட்டியில் தமிழக அரசின் எலைட் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்ரக மதுபாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று கடையில் பணியிலிருந்த ஊழியரில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது, பெட்டிக்குள் சாரைப்பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தைரியமாகப் பெட்டிக்குள் இருந்த பாம்பினை லாவகமாகப் பிடித்துள்ளார்.
பின்னர்,டாஸ்மாக் ஊழியர்களே அந்த பாம்பினை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.