விதை சான்றளிப்பு இயக்குநர் அலுவலகம் கோவையிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்- தமிழக முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்

கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவையிலேயே செயல்பட அனுமதிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவையிலேயே செயல்பட அனுமதிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-

தமிழக விதை சான்றளிப்பு துறை, அங்கச்சான்று துறை கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 835 பணியாளர்கள் உள்ளனர். கோவையில் மட்டும் 60 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.

இந்த துறையின் மூலம் விவசாயிகள் ஒப்பந்த சாகுபடியாளர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் விதைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் சான்று விதைப் பண்ணை பதிவு 55 ஆயிரம் எக்டேர் ஆகும்.

சான்று விதை உற்பத்தி சுமார் 1.10 லட்சம் டன்கள் ஆகும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களிலிருந்து மொத்தம் 70 சதவீத விதைப் பண்ணைகள் பதிவு செய்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தை மையப்படுத்தி இந்த இயக்குநர் அலுவலகம் கோவையில் செயல்படுவதால் விவசாயிகளுக்கு இது மிகவும் சிரமம் இல்லாமல் இருந்து வருகிறது.

எனவே இந்த அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யக்கூடாது என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...