கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவையிலேயே செயல்பட அனுமதிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் இயங்கி வரும் விதை சான்றளிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யாமல் கோவையிலேயே செயல்பட அனுமதிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-
தமிழக விதை சான்றளிப்பு துறை, அங்கச்சான்று துறை கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 835 பணியாளர்கள் உள்ளனர். கோவையில் மட்டும் 60 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.
இந்த துறையின் மூலம் விவசாயிகள் ஒப்பந்த சாகுபடியாளர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் விதைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் சான்று விதைப் பண்ணை பதிவு 55 ஆயிரம் எக்டேர் ஆகும்.
சான்று விதை உற்பத்தி சுமார் 1.10 லட்சம் டன்கள் ஆகும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களிலிருந்து மொத்தம் 70 சதவீத விதைப் பண்ணைகள் பதிவு செய்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தை மையப்படுத்தி இந்த இயக்குநர் அலுவலகம் கோவையில் செயல்படுவதால் விவசாயிகளுக்கு இது மிகவும் சிரமம் இல்லாமல் இருந்து வருகிறது.
எனவே இந்த அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யக்கூடாது என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-
தமிழக விதை சான்றளிப்பு துறை, அங்கச்சான்று துறை கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 835 பணியாளர்கள் உள்ளனர். கோவையில் மட்டும் 60 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.
இந்த துறையின் மூலம் விவசாயிகள் ஒப்பந்த சாகுபடியாளர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் விதைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று அளிக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் சான்று விதைப் பண்ணை பதிவு 55 ஆயிரம் எக்டேர் ஆகும்.
சான்று விதை உற்பத்தி சுமார் 1.10 லட்சம் டன்கள் ஆகும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களிலிருந்து மொத்தம் 70 சதவீத விதைப் பண்ணைகள் பதிவு செய்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தை மையப்படுத்தி இந்த இயக்குநர் அலுவலகம் கோவையில் செயல்படுவதால் விவசாயிகளுக்கு இது மிகவும் சிரமம் இல்லாமல் இருந்து வருகிறது.
எனவே இந்த அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றம் செய்யக்கூடாது என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.