கோவை அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகை நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் தனியார் மருத்துவமனை போன்று குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க ஆலோசித்து அதற்கான இடங்களைப் பார்த்து வருவதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனைக்குத் தினமும் பல்வேறு மாவட்டங்கள், அருகில் உள்ள கேரளா மாநிலம் போன்றவற்றிலிருந்து 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு ஏழை, எளியோர் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் வந்து சிகிச்சை பெறும் வகையில் குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகை நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் தனியார் மருத்துவமனை போன்று குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க ஆலோசித்து அதற்கான இடங்களைப் பார்த்து வருகிறோம். இந்த புதிய திட்டம் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் செயல்படுத்தப்படும்,’’ என்றார்.
கோவை அரசு மருத்துவமனைக்குத் தினமும் பல்வேறு மாவட்டங்கள், அருகில் உள்ள கேரளா மாநிலம் போன்றவற்றிலிருந்து 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு ஏழை, எளியோர் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் வந்து சிகிச்சை பெறும் வகையில் குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகை நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் தனியார் மருத்துவமனை போன்று குறைந்த வாடகையில் சிறப்பு வார்டு உருவாக்க ஆலோசித்து அதற்கான இடங்களைப் பார்த்து வருகிறோம். இந்த புதிய திட்டம் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் செயல்படுத்தப்படும்,’’ என்றார்.