கிராவல் மண் எடுத்துச்செல்லும் வாகனத்தை இயக்குவது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் 25,000 லஞ்சம் வாங்கியதால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் 25,000 லஞ்சம் வாங்கியதால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். கிராவல் மண் எடுத்துச்செல்லும் வாகனத்தை இயக்குவது தொடர்பாக, ரூ.30 ஆயிரத்தை ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
தொடர்புடைய நபர் பேரம் பேசியதில் ரூ.25 ஆயிரம் தருமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத அந்நபர், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தல் படி, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, வருவாய் ஆய்வாளரிடம் அந்நபர் கொடுத்துள்ளார். அப்போது கையும், களவுமாகச் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். கிராவல் மண் எடுத்துச்செல்லும் வாகனத்தை இயக்குவது தொடர்பாக, ரூ.30 ஆயிரத்தை ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
தொடர்புடைய நபர் பேரம் பேசியதில் ரூ.25 ஆயிரம் தருமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத அந்நபர், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தல் படி, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, வருவாய் ஆய்வாளரிடம் அந்நபர் கொடுத்துள்ளார். அப்போது கையும், களவுமாகச் செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.