கோவையில் முப்படை வீரர்களின் கொடி நாள் அனுசரிப்பு விழா: ரூ. 1.95 கோடி வசூல் - கோவை மாவட்ட ஆட்சியர்

2021 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்‌ சமீரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, முப்படை வீரர்களின் கொடிநாள் அனுசரிப்பு நாள் விழா நடைபெற்றது.


கோவை: நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.



இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

அந்த வகையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் படைவீரர் கொடி நாள் -2021 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர்ஜி.எஸ்‌ சமீரன் உண்டியல் வாயிலாக துவக்கி வைத்தார். தொடர்ந்து, முப்படை வீரர்களின் கொடிநாள் அனுசரிப்பு நாள் விழா நடைபெற்றது.



இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுதாவது:- கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாக 1 கோடியே 9 இலட்சத்து 59 ஆயிரம் வசூவாகியுள்ளது. இந்த வருடத்தை விட அடுத்த வருடம் 200 சதவீதம் அதிகமாக பணம் வசூல் ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் முப்படைவீரர் தலைவர் சாரதி, மாநகராட்சி ஆணையர் ராஜ்கோபால் சுன்ஹாரா, காவல்துறையினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...