2021 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ் சமீரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, முப்படை வீரர்களின் கொடிநாள் அனுசரிப்பு நாள் விழா நடைபெற்றது.
கோவை: நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் படைவீரர் கொடி நாள் -2021 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர்ஜி.எஸ் சமீரன் உண்டியல் வாயிலாக துவக்கி வைத்தார். தொடர்ந்து, முப்படை வீரர்களின் கொடிநாள் அனுசரிப்பு நாள் விழா நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுதாவது:- கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாக 1 கோடியே 9 இலட்சத்து 59 ஆயிரம் வசூவாகியுள்ளது. இந்த வருடத்தை விட அடுத்த வருடம் 200 சதவீதம் அதிகமாக பணம் வசூல் ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்நிகழ்வில் முப்படைவீரர் தலைவர் சாரதி, மாநகராட்சி ஆணையர் ராஜ்கோபால் சுன்ஹாரா, காவல்துறையினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.
இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் படைவீரர் கொடி நாள் -2021 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர்ஜி.எஸ் சமீரன் உண்டியல் வாயிலாக துவக்கி வைத்தார். தொடர்ந்து, முப்படை வீரர்களின் கொடிநாள் அனுசரிப்பு நாள் விழா நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுதாவது:- கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாக 1 கோடியே 9 இலட்சத்து 59 ஆயிரம் வசூவாகியுள்ளது. இந்த வருடத்தை விட அடுத்த வருடம் 200 சதவீதம் அதிகமாக பணம் வசூல் ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்நிகழ்வில் முப்படைவீரர் தலைவர் சாரதி, மாநகராட்சி ஆணையர் ராஜ்கோபால் சுன்ஹாரா, காவல்துறையினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.