கோவையில் யார் உதவியும் இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், குழந்தை இறப்பு..! தாய் மீது வழக்குபதிவு.

முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததால்,  பெரிய கடை வீதி போலீசார் தாய் மீது Sec 315 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி (32). இவர்களுக்கு, ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானதால், புண்ணியவதி மனவருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணியான அவர் வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். அவருக்குஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தொப்புள்கொடி சரியாக அறுபடாததால், குழந்தையும், தாயும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். 

அவரது வீட்டில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் மற்றும் சேயை பரிசோதித்த மருத்துவர்கள், முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பெரியகடை வீதி காவல் நிலையஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தி, புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315 (குழந்தை உயிருடன் பிறப்பதைத் தடுத்தல் மற்றும் பிறந்த பின் இறக்கச் செய்தல்) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...