கோவை கடைத்தெருக்களில் அதிகரிக்கும் கூட்டம்; மாநகராட்சி பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டம்..!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா நோய் பரவல் சற்றே குறைந்துள்ளதால், கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இப்பகுதிகளில், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படைகளை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு, ஓமிக்ரான் பரவல், கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வருவாய்த்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தும், மக்களுக்குப் பயம் என்பதே இல்லை என்பதால், கொரோனா விதிமீறல்களைத் தீவிரமாகக் கண்காணிக்கப் பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் மார்கெட் பகுதிகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

"கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பறக்கும் படைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்,’’ என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...