வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படாமல் இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, அந்தந்த தாலுகா மற்றும் வருவாய் கோட்டங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இதன் ஒருபகுதியாக வருகிற 9-ஆம் தேதி கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட வடசித்தூரில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற இருப்பதாக வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கலாம் என்றும், மேலும் அரசு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...