EXCLUSIVE: பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைப்பதால் கோவைக்குப் படையெடுக்கும் கேரள மக்கள்: நோய்த்தொற்று காலத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக உள்ளூர் பயனாளிகள் புகார்

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைப்பதால் கோவைக்குப் படையெடுக்கும் கேரள மக்களால் நோய்த்தொற்று காலத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகத் தமிழக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை உள்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். கோவையில், உப்பிலிபாளையம் பகுதியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அலுவலகம் மற்றும் அவிநாசி ரோடு சித்ரா அருகே பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு தினங்களில் பயனாளிகளுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கோவை மட்டுமின்றி குறிப்பாகக் கேரளாவைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் தினமும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் பெற்று அலுவலகத்திற்கு வந்து செல்வதாகவும், இதனால் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாகவும் பயனாளிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயனாளிகள் சிலர் கூறியதாவது:-

"கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பல விருதுகளை பெற்றுள்ளது. அவிநாசி ரோட்டில் சித்ரா அருகே அமைந்துள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று கட்டமைப்பு மற்றும் பயனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி குறிப்பாகக் கேரளாவைச் சேர்ந்த மக்கள் மிக அதிக அளவில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயின்ட்மென்ட் பெற்று. தினமும் கோவைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ, பி, சி கவுன்ட்டர்களில் 'ஏ' கவுன்ட்டரில் மிக விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பி, சி கவுன்ட்டர்களில் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. அங்கு 30 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கைகள் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இதனால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

நோய் தொற்று அபாயம் உள்ளது. கேரளாவில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் பாஸ்போர்ட் பெற அப்பாயின்மென்ட் வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கோவையில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓரிரு நாட்களில் அப்பாயின்ட்மென்ட் கிடைப்பதால் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரோனா நோய் தொற்று நோய் பரவல் மட்டுமின்றி தற்போது 'ஓமைக்ரான்' வைரஸ் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயனாளிகள் அனைவரும் உரிய நேரத்தில் தங்களது பணிகளை முடித்து விட்டு செல்லும் வகையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பாஸ்போர்ட் பயனாளிகள் தெரிவித்தனர்.

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:-

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்குத் தேவையான சேவை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய்த்தொற்று பரவலுக்கு பின் தற்பொழுது மீண்டும் விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கூட்ட நெரிசல் என்பது தற்காலிகமான பிரச்சினைதான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இருப்பினும் முதியவர்கள், பச்சிளம் குழந்தை வைத்துள்ள தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில், பாஸ்போர்ட் பயனாளிகள் அப்பாயின்ட்மெண்ட் பெற 18 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால் கோவையில் ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைத்து விடுகிறது. அந்த அளவுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டும் சேவையை பெறுவதைத் தவிர்த்து தேவையான ஆவணங்களுடன் நாட்டிலுள்ள எந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் சேவையைப் பெறலாம் என அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே கேரளாவை சேர்ந்த மக்கள் பின்னர் கோவைக்கு வந்து சேவை பெற்று செல்கின்றனர். எதிர்வரும் நாட்களிலும் பாஸ்போர்ட் பயனாளிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...