கோவையில்‌ மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு: மாநகராட்சியில்‌ முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்..!‌

கோவை மாநகராட்சியில்‌ முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கானீ ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கான்‌ ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தாவு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ இன்று 06.12.2021 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பேசியதாவது, “கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கானி ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும்‌, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள்‌ துவங்குவதற்கு முன்பாகவே மழைநீர்‌

வடிகால்களைத் தூர்வாரிட வேண்டும்‌.

மேலும்‌, எவ்வகையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென விரிவான திட்டமிடுதல்‌ வேண்டும்‌. இவ்விடங்களில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி கண்காணிப்பு கேமராக்கள்‌ பொருத்திக் கண்காணிக்க வண்டும்‌. அதிவேக மோட்டார்கள்‌ பொருத்தித் தேங்கும்‌ மழைநீரை வெளியேற்றுதல்‌, மழைநீரை வேறு இடங்களுக்குத் திருப்பி விடச் சாத்தியக்‌ கூறுகளைக் கண்டறிதல்‌ வேண்டும்‌.

மாநகராட்சிப்‌ பொறியாளர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ மருத்துவர்கள்‌, தொழிலதிபர்கள்‌, தலைசிறந்த கல்லூரி பொறியாளர்கள்‌, தன்னார்வலர்கள்‌ ஆகியோர்களை ஒருங்கிணைத்து வல்லுநர்‌ குழு அமைத்து உரிய திட்டமிடுதல்‌ மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில்‌ மீண்டும்‌ இக்குழுவில்‌ யார்‌ யார்‌ இடம்‌ பெறுவது என்பது குறித்தும்‌, தொடர்‌ நடவடிக்கைகளில்‌ மேற்கொள்வது குறித்து மீண்டும்‌ கூடி ஆலோசிக்கப்படும்‌. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இக்குழுவிற்கு ஒரு மாத காலத்திற்குள்‌ வழங்க வேண்டும்‌” என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, சூயஸ்‌ திட்ட இயக்குநர்‌ அமிர்த்‌ நியோகி, மாநகராட்சி பொறியாளாகள்‌ ராமசாமி, பிரபாகா, ஓய்வு பெற்ற ஆர்கிடெக்ட்‌, தொழில்நுட்ப வல்லுநர்கள்‌, தன்னார்வலர்கள்‌, ஓய்வு பெற்ற பொறியியல்‌ கல்லூரி பேராசிரியா உள்ளிட்டோர்‌ இருந்தனர்‌.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...