பொள்ளாச்சி அருகே பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்..!

பொள்ளாச்சி அருகே பள்ளி பராமரிப்பிற்கு அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாகத் தலைமை ஆசிரியை கண்டித்து பள்ளியைப் பெற்றோர்கள் முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பள்ளி பராமரிப்பிற்கு அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாகத் தலைமை ஆசிரியை கண்டித்து பள்ளியைப் பெற்றோர்கள் முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150-மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் மாணவர்களுக்கு முறையாகக் கல்வி பயிற்றுவிப்பதில்லை, கழிப்பிடம் மற்றும் பள்ளியைச் சுகாதாரமாக வைப்பதில்லை என கூறி இன்று பள்ளியைப் பெற்றோர்கள் திடீரென முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி கழிப்பிடம் சுகாதாரமாக இல்லாததால் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தலைமை ஆசிரியர் உணவருந்திய பாத்திரங்களை மாணவர்களைக் கழுவச் சொல்வதாகவும், பள்ளி மேலாண்மை குழுவில் மாணவர்களின் பெற்றோர்களைத் தவிரத் தலைமை ஆசிரியரின் கணவர், மற்றும் உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு செயல்படுவதால் ஆண்டு தோறும் பள்ளி பராமரிப்பு செலவினங்களுக்கு வரும் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகவும் தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் டெங்குகாய்ச்சல் பாதிப்பால் இறந்ததாகவும் இதற்கு பள்ளியின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருப்பதே காரணம் என்றும் குற்றம் சாட்டிய பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி முற்றுகை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர் இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...