இதில் மாநகரில் 86 வழக்குகளும், மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவை: கோவையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக, மாநகரில் 86 வழக்குகளும், மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. எனினும் அவற்றின் விற்பனை சட்டவிரோதமாக தொடர்ந்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், போலீசாரும் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை மாநகரில் மட்டும், 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பாக்கெட்டுகள் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, மது பாட்டில்களை சட்டவிரோதமாக வெளியில் விற்றதாகவும், 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் 501 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. எனினும் அவற்றின் விற்பனை சட்டவிரோதமாக தொடர்ந்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், போலீசாரும் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை மாநகரில் மட்டும், 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பாக்கெட்டுகள் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, மது பாட்டில்களை சட்டவிரோதமாக வெளியில் விற்றதாகவும், 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் 501 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.