கோவையில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்; 2 பேர் போக்சோவில் கைது ..!

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவுசல்யா விசாரணை நடத்தி, லிங்கேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: கோவையில் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

கோவை சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கர்ணன் என்ற லிங்கேசன் (33) தச்சுதொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை 13 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார். பின்னர் லிங்கேசன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தையை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்பமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கவுசல்யா விசாரணை நடத்தி, லிங்கேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதேபோல, ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் மது (23). இவர் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பேரூர் ஆய்வாளர் பர்வீன்பானு, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...