டெல்டா உட்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமைக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் தென் ஆப்பிரிக்கா உட்பட மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள 12 நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 70 போ் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகையே இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருவாகியுள்ளது.
டெல்டா உட்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமைக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, சிங்கப்பூா், ஹாங்காங், இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மிகத் தீவிரமாக பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருபவா்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவா்களை 7 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட நாடுகளில் இருந்து கடந்த 5 நாள்களில் கோவைக்கு வந்த 70 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி. அருணா கூறியதாவது:
தென் ஆப்பிரிக்கா உட்பட மத்திய அரசு அறிவித்துள்ள 12 நாடுகளில் இருந்து 70 போ் கோவை வந்துள்ளனர். இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பில்லை. இருந்தும் 70 பேரையும் 7 நாள்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவா்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறாா்களா என்று கண்காணிக்க உள்ளாட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.
உலகையே இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருவாகியுள்ளது.
டெல்டா உட்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமைக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, சிங்கப்பூா், ஹாங்காங், இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மிகத் தீவிரமாக பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருபவா்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவா்களை 7 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட நாடுகளில் இருந்து கடந்த 5 நாள்களில் கோவைக்கு வந்த 70 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி. அருணா கூறியதாவது:
தென் ஆப்பிரிக்கா உட்பட மத்திய அரசு அறிவித்துள்ள 12 நாடுகளில் இருந்து 70 போ் கோவை வந்துள்ளனர். இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பில்லை. இருந்தும் 70 பேரையும் 7 நாள்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவா்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறாா்களா என்று கண்காணிக்க உள்ளாட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.