கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கார் திடீரென தீ விபத்து - சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்போது திடீரென கார் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், ஆட்சியர் வளாகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்பு நாள் நடைபெற்று வருவது விளக்கம்.

அதன்படி, குறைதீர்ப்பு நாளான இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காலை 8 மணி முதல் மனு கொடுக்க வந்தபடி உள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கார் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்போது திடீரென தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.



இதையடுத்து, உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த நபர்கள் தீயணைப்பு கருவி எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் இருக்கக்கூடிய இடத்தில் திடீரென தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...