இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கோவை: மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு உரமிட வேண்டும் என்று தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னமநல்லூர் கிராமத்தில், உலக மண் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி பேசுகையில், "மண் மாதிரிகளின், மண்வள அட்டை அடிப்படையில், பயிர்களுக்கு உரங்கள் இட்டு, மண் உவர் நிலமாவதை தடுத்து, விவசாயிகள் உற்பத்தியை பெருக்க வேண்டும்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேளாண்மைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னமநல்லூர் கிராமத்தில், உலக மண் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி பேசுகையில், "மண் மாதிரிகளின், மண்வள அட்டை அடிப்படையில், பயிர்களுக்கு உரங்கள் இட்டு, மண் உவர் நிலமாவதை தடுத்து, விவசாயிகள் உற்பத்தியை பெருக்க வேண்டும்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.