மண் பரிசோதனை அடிப்படையில் உரம் வழங்கப்படும் - உலக மண் தினத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்..!

இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு உரமிட வேண்டும் என்று தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேளாண்மைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னமநல்லூர் கிராமத்தில், உலக மண் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி பேசுகையில், "மண் மாதிரிகளின், மண்வள அட்டை அடிப்படையில், பயிர்களுக்கு உரங்கள் இட்டு, மண் உவர் நிலமாவதை தடுத்து, விவசாயிகள் உற்பத்தியை பெருக்க வேண்டும்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...