குடியிருப்போர் பங்களிப்புடன் நலச்சங்க நிர்வாகிகள் மேற்கொண்ட இந்த முயற்சியால் மொத்தம் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது இந்து நகர் மற்றும் விஐபி நகர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.குற்றச் சம்பவங்கள் தடுப்பதில் மூன்றாவது கண் என்று சொல்லக்கூடிய சிசிடிவி கேமராக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை உணர்ந்து இப்பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், குடியிருப்பு பகுதி வளாகத்தின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் துவக்க விழா இன்று மாலை நடந்தது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பி ஆர் ஜி அருண்குமார், சிசிடிவி கேமரா கண்காணிப்பு திரையை திறந்து வைத்தார். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ கே ஆர் ஜெயராம், சிசிடிவி கேமரா கன்ட்ரோல் ரூம் அலுவலகம் மற்றும் கைபேசி இணைப்பு செயலியை துவக்கி வைத்தார்.

இந்து நகர் மற்றும் விஐபி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் ராமநாதன், துணைத் தலைவர் சூரியன், செயலாளர் வேணுகோபால், இணைச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கி வரும் 'Ammarun' பவுண்டரி நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நூறு வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை தடுக்க ஒற்றுமையுடன் செயல்படும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை சிறப்பு விருந்தினர்கள் வெகுவாக பாராட்டினர்.
இதன் துவக்க விழா இன்று மாலை நடந்தது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பி ஆர் ஜி அருண்குமார், சிசிடிவி கேமரா கண்காணிப்பு திரையை திறந்து வைத்தார். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ கே ஆர் ஜெயராம், சிசிடிவி கேமரா கன்ட்ரோல் ரூம் அலுவலகம் மற்றும் கைபேசி இணைப்பு செயலியை துவக்கி வைத்தார்.
இந்து நகர் மற்றும் விஐபி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் ராமநாதன், துணைத் தலைவர் சூரியன், செயலாளர் வேணுகோபால், இணைச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கி வரும் 'Ammarun' பவுண்டரி நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நூறு வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை தடுக்க ஒற்றுமையுடன் செயல்படும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை சிறப்பு விருந்தினர்கள் வெகுவாக பாராட்டினர்.