குண்டல் பேட் பகுதியிலிருந்து கோவை- பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 1. 7-டன் ஹான்ஸ் குட்கா குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3-பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி: குண்டல் பேட் பகுதியிலிருந்து கோவை பொள்ளாச்சிக்குக்கொண்டு சென்ற 1. 7 டன் ஹான்ஸ் குட்கா குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக3-பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுகர்நாடகாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குப் போதைப் பொருட்கள்கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், லெவல் கிராசிங் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த கர்நாடகா லாரியைசோதனை செய்ததில் தேங்காய் மட்டைகளுக்குள் 75-மூட்டைகளில் போதைப் பொருட்கள் இருந்துள்ளது. தொடர்ந்த விசாரணை நடத்திய போலீசார் மைசூரை சேர்ந்த டிரைவர் சுரேஷ், குருராஜ், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
இதில் 1. 7 டன் அளவிலான ஹான்ஸ், குட்கா மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த வர்த்தக மதிப்பு 8.35 லட்சம் இருக்கும் எனவும் மார்கெட் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.