உழவர் உற்பத்தியாளர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: வேளாண்துறை மற்றும் வணிகத்துறை, கோயமுத்தூர் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மூன்று பகுதியையும் சேர்ந்த நிர்வாகிகள் அவர் அவர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், உற்பத்தி செய்யும் ஆலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பேசப்பட்டது. மேலும், இதில் கோவையைச் சார்ந்த 8 நபர்களும், திருப்பூரைச் சார்ந்த 10 நபர்களும், ஈரோட்டைச் சார்ந்த 12 நபர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினர். மேலும், நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர் அவர் நிறுவனங்கள் குறித்து விளக்க உறையும் நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குனர் நடராஜன் கூறியதாவது;
கோவையில் 21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை விற்பனையால் இருமடங்கு உற்பத்தியால் மும்மடங்கு வருமானம் என்று இன்று செயல்பட்டு வருகின்றது. உலகத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப உழவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் உழவர்களை நவீன முறையை பயன்படுத்தி அதிக லாபம் அடைய வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்தார்.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் விலைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மூன்று பகுதியையும் சேர்ந்த நிர்வாகிகள் அவர் அவர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும், உற்பத்தி செய்யும் ஆலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பேசப்பட்டது. மேலும், இதில் கோவையைச் சார்ந்த 8 நபர்களும், திருப்பூரைச் சார்ந்த 10 நபர்களும், ஈரோட்டைச் சார்ந்த 12 நபர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினர். மேலும், நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர் அவர் நிறுவனங்கள் குறித்து விளக்க உறையும் நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குனர் நடராஜன் கூறியதாவது;
கோவையில் 21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை விற்பனையால் இருமடங்கு உற்பத்தியால் மும்மடங்கு வருமானம் என்று இன்று செயல்பட்டு வருகின்றது. உலகத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப உழவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் உழவர்களை நவீன முறையை பயன்படுத்தி அதிக லாபம் அடைய வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்தார்.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் விலைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.