இந்த பயிற்சியில் ஒரு தெருவானது வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான சாலைகளை வடிவமைப்பது குறித்து மாநகராட்சி என்ஜினீயர்களுக்கு ஜெர்மன் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் மூலம் கோவை, புவனேஸ்வர் மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் ஜெர்மனை சேர்ந்த அமைப்பான ஜெர்மன் வளர்ச்சி ஏஜென்சி மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியை சேர்ந்த என்ஜினீயர்களுக்கு ஜெர்மன் நாட்டை சேர்ந்த அமைப்பின் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வார பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல் இந்தாண்டும் ஒரு வார கால பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜெர்மன் அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது, நடந்து செல்லும் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாலை வடிவமைத்தல் செய்வது, சாலையோர வியாபாரிகள், முதியோர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பானதாக ஒரு தெரு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் ஒரு தெருவானது வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவம் குறித்தும், நடைபாதைகள், தெருவிளக்குகள் அமைப்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது,’’ என்று தெரிவித்தார்.
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் மூலம் கோவை, புவனேஸ்வர் மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் ஜெர்மனை சேர்ந்த அமைப்பான ஜெர்மன் வளர்ச்சி ஏஜென்சி மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியை சேர்ந்த என்ஜினீயர்களுக்கு ஜெர்மன் நாட்டை சேர்ந்த அமைப்பின் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வார பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல் இந்தாண்டும் ஒரு வார கால பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜெர்மன் அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது, நடந்து செல்லும் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாலை வடிவமைத்தல் செய்வது, சாலையோர வியாபாரிகள், முதியோர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பானதாக ஒரு தெரு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் ஒரு தெருவானது வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவம் குறித்தும், நடைபாதைகள், தெருவிளக்குகள் அமைப்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது,’’ என்று தெரிவித்தார்.