கோவையில் கொட்டி தீர்த்த கனமழை..! சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் மூழ்கிய கார்..!!

உப்பிலிபாளையம் மரக்கடை பாலத்திற்கு கீழ் கார் ஒன்று நீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி உயிர் தப்பினார்.


கோவை: கோவையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் வானம் கருமேகம் சூழ்ந்து திரண்டு இருந்தது. அப்போது, கருமேகம் சூழ்ந்து இருந்ததால் பகலில் கூட இரவு போல் காட்சி அளித்தது.



இதைத்தொடர்ந்து, மதியம் சரியாக 1.30 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித்தீர்த்தது.



இந்த கனமழை காரணமாக உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், காந்திமாநகர், பீளமேடு, கீரணத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.



இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர்.

மேலும், கனமழை காரணமாக கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.



அதேபோல, உப்பிலிபாளையம் மரக்கடை பாலத்திற்கு கீழ் கார் ஒன்று நீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி உயிர் தப்பினார். மேலும், லங்கா கார்னர் சுரங்கபாதையில், தனியார் பேருந்து ஒன்று மாட்டிக்கொண்டது, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.

மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...