கோவையில் தொடரும் கனமழை..! மழை பாதிப்புகளை சீர் செய்ய மாநகராட்சி சார்பில் 5 ஜேசிபி வாகனங்கள், மோட்டார் பம்புகள், சூப்பர் சக்கர் வாகனம் தயார்..!

மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஜேசிபி வாகனம் என 5 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் தொடரும் கனமழை காரணமாக அதன் பாதிப்புகளை சீர் செய்ய மாநகராட்சி சார்பாக 5 ஜேசிபி வாகனங்கள், சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள், சூப்பர் சக்கர் வாகனம் போன்றவைகள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 9 குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட வீதிகள் பலவற்றிலும் குறிப்பாக ராஜவாய்க்கல் செல்லும் வீதிகளில் மழை பெய்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் அவினாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி ரயில்வே பாலம் என பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து விடுகின்றன.

இதுதவிர சாலைகளில் மரம் விழுதல், சாலை சேதமடைதல் போன்றவைகளும் நடக்கின்றன. எனவே தொடரும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய தயார் நிலையில் 5 ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஜேசிபி வாகனம் என 5 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சூப்பர் சக்கர் வாகனம், சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்றவைகளும் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...