உடுமலையில் இருந்து கேரளாவிற்கு நேரடி பேருந்து போக்குவரத்து தொடக்கம்..!

காலை 6.30 மணிக்கு உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், காலை 11.30 மணிக்கு மூணாறில் இருந்து உடுமலைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


திருப்பூர்: உடுமலையில் இருந்து கேரளாவிற்கு நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

உடுமலையில் இருந்து நேரடியாகவும், கோவையில் இருந்து உடுமலை வழியாகவும் கேரள மாநிலம் மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சம் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்பும்கூட இரு மாநிலங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு உத்தரவின் பேரில் உடுமலை கிளையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறையினர் கூறும்போது, ‘‘கொரோனா பரவல் காரணமாக 18 மாத இடைவெளிக்குப் பின்பு கேரளாவுக்கு தமிழக அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 6.30 மணிக்கு உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், காலை 11.30 மணிக்கு மூணாறில் இருந்து உடுமலைக்கும் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றனர்.

அதேபோல, கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையாறு அணை, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாலக்குடியில் இருந்து மளுக்கப்பாறை வரை, தினமும் ஐந்து முறை கேரளா பேருந்து இயக்கப்படுகிறது.

மேலும், நேற்று முன்தினம் முதல் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...