எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் “சிகரங்களை நோக்கி” தன்னம்பிக்கை பயிலரங்கம்


கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...