விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார், "EEE" திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை: விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார், "EEE" திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாநகர காவல் விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார், "EEE"(Enforcement, Education, Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையர், முக்கிய சந்திப்பு பகுதிகளைத் தேர்ந்தெடுத்து "போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு" (Zero violation Junction)என அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

கோவை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் S.R.செந்தில்குமார், தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், சிந்தாமணி சந்திப்பு பகுதியைப் போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு" (Zero violation Junction) எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இந்நிகழ்வில், காவல் ஆணையர் பிரதீப் குமார், கலந்துகொண்டு விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



சிந்தாமணி சந்திப்புப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து கொண்டு தலைக்கவசம் அணியாதவர்கள், சிக்னல்களில் எல்லைக் கோட்டை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் என பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு, வாகன விபத்து எவ்வாறு நடைபெறுகிறது என்பது பற்றியும் அவ்வாறு வாகன விபத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.



அதனைத் தொடர்ந்து அவர்களுக்குச் சாலை விதிகள் பற்றிய துண்டுப்பிரசுரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி NSS மாணவர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் ஏற்படுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...