பெட்ரோலில் தண்ணீர் கலப்படமா? திருப்பூரில் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

திருப்பூரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.



திருப்பூர் - போயம்பாளையம் பிரிவில், மோகன் என்பவர் பார்வதி ஏஜன்சீஸ் என்ற பெயரில் பாரத் பெட்ரோலிய நிறுவன பெட்ரோல் பங்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியவர்கள், பெட்ரோல் தண்ணீர் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்து பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.

மேலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிரப்பியதால், வாகனங்கள் பழுதடைந்துவிட்டதாகவும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியவர்கள் பெட்ரோல் பங்கில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை நிரப்பியதால் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துவிட்டதாகவும், பெட்ரோல் பங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறுகையில், பெட்ரோல் சேமிக்கும் டேங்கில், மழைநீர் புகுந்ததால் பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டதாகவும், தண்ணீர் கலந்தது தெரிய தாமதமானதால், இந்த தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், பழுதடைந்த வாகனங்கள் சரி செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...