'ஒமைக்ரான்' எதிரொலி: விமானத்தில் கோவை வந்த 17-பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு..!

கோவை வந்த 17-பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17-பேரும் தனியைப் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.


கோவை: கோவை வந்த 17-பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17-பேரும் தனியைப் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் கொரோனோ தொற்று 2-வது அலை சற்று குறைந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

புதிதாக உருமாறிய இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்படப் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதால் அந்த நாடுகள் அதிக ஆபத்து 'நாடுகள்' என்று பட்டியல் இடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த நாடுகளிலிருந்து கோவைக்குக் கடந்த ஒரு மாதத்தில் 17-பேர் வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் புதிய வைரஸ் கண்டறிவதற்கு முன்பே அதாவது கடந்த மாதம் 24-ம் தேதிக்கு முன்பே கோவை வந்தவர்கள். கோவை வந்த போது புதிய ஒமைக்ரான் வைரஸ் பற்றி உலகிற்குத் தெரியாது.

ஆனால் தற்போது அது தெரியவந்துள்ளதால் அந்த நாடுகளிலிருந்து கோவை வந்த 17 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17 பேரும் தனியைப் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். என்றும், அவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஓமைக்கிரான் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி அங்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர். உடனடியாக தனிமைப் படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...